/ தினமலர் டிவி
/ பொது
/ பிரியாணி அரிசி வாங்கியவரை தேடி வந்த போலீஸ் Cuddalore | Vadalur | Rice merchant
பிரியாணி அரிசி வாங்கியவரை தேடி வந்த போலீஸ் Cuddalore | Vadalur | Rice merchant
கடலூர் மாவட்டம், வடலூர் ராகவேந்திரா சிட்டியை சேர்ந்தவர் சண்முகம். நெய்வேலி சாலையில் அரிசி கடை நடத்தி வருகிறார். அவர் வெளியில் சென்று இருந்ததால், அவரது மைத்துனர் சீனிவாசன் கடையில் இருந்தார். நெய்வேலி அருகே மேல்பாதி கிராமத்தை சேர்ந்த பூபாலன், கடைக்கு வந்து 16 கிலோ பிரியாணி அரிசி வாங்கினார். பிரியாணி அரிசி குறைவாக இருந்த சிறிய மூட்டையை எடுத்து அப்படியே அளந்து மூட்டையுடன் கொடுத்தார் சீனிவாசன். கடைக்கு வந்த சண்முகம், அந்த அரிசி மூட்டையை தேடினார். அந்த அரிசி மூட்டையை விற்று விட்டதாக மைத்துனர் சீனிவாசன் கூறியதால் சண்முகம் படபடப்பு அடைந்தார்.
அக் 24, 2024