/ தினமலர் டிவி
/ பொது
/ முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்! ஒருவர் கைது | cyber fraud | ED Raid | West Bengal
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்! ஒருவர் கைது | cyber fraud | ED Raid | West Bengal
நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களில் பலரும் பணத்தை இழந்து தவிப்பது சைபர் கிரைம் எனப்படும் டிஜிட்டல் முறையிலான மோசடி தான். இதில் சிக்கியவர்கள் சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை ஏராளம். அந்தவகையில் தமிழகத்தில் மட்டும் நடந்த சைபர் மோசடியில் இதுவரை 1,000 கோடி வரை ஏமாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. பல கட்ட விசாரணையில் மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இது தொடர்பாக மேற்கு வங்கத்தில் 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜன 03, 2025