17 ஊரை மிரட்டும் பெஞ்சல் புயல் மிச்சம்-முக்கிய அப்டேட் | cyclone fengal | fenjal update | rain today
காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரியை ஒட்டியபடி நேற்று முன்தினம் இரவில் கரையை கடந்த பெஞ்சல் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்தது. இப்போது தமிழகத்தின் வட உள் மாவட்டங்கள் வழியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அரபி கடலை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை கேரள, கர்நாடக எல்லையை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும். இதன் தாக்கம் எதிரொலியாக தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மலைப்பகுதியில் இன்று அதி கனமழை கொட்டித்தீர்க்கும். ஒரே நாளில் 210 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை சமவெளி பகுதி மற்றும் ஈரோடு, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், திருச்சி, மதுரை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.