/ தினமலர் டிவி
/ பொது
/ அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் இருவர் மரணம் Delhi Building collapse| Seelampur Incident | Mult
அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் இருவர் மரணம் Delhi Building collapse| Seelampur Incident | Mult
டில்லி சீலாம்பூர் என்ற இடத்தில், 4 அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு பதறிய அக்கம் பக்கத்தினர் வீடுகளை விட்டு வெளியேறினர். 7 வாகனங்களில் வந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் வந்து மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். நான்கு மாடி கட்டடத்தில் நான்கு குடும்பங்கள் வசித்து வந்தன. இதுவரை 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இருவர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். கட்டடம் இடிந்ததற்கான காரணம் பற்றி விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறினர்.
ஜூலை 12, 2025