டெல்லி சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! 4 பேர் கைது!
டெல்லி ஸ்வரூப் நகர் பகுதியில், 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 10-ம் தேதி, தனக்கு தெரிந்த 17 வயது சிறுவனை சந்திப்பதற்காக சிறுமி சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், செப்டம்பர் 13-ம் தேதி குஷக் சாலைக்கு அருகே உள்ள வயல் பகுதியில் சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை மீட்ட போலீசார், விசாரணையை தொடங்கினர்.
செப் 18, 2026