/ தினமலர் டிவி
/ பொது
/ டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 18 வங்கதேசத்தினர் கைது! Delhi Police arrested 18 Bangladeshis
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 18 வங்கதேசத்தினர் கைது! Delhi Police arrested 18 Bangladeshis
டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டில்லியின் வட மேற்கு பகுதியில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்தினர். அசோக் விகார் பகுதியில் 150க்கும் மேற்பட்ட தெருக்களில் சல்லடை போடப்பட்டது. சந்தேகத்திற்குரிய நபர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை குழப்பும் வகையில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
ஜூன் 28, 2025