/ தினமலர் டிவி
/ பொது
/ கூடுதல் எஸ்பி, ஜெயிலரையும் சஸ்பெண்ட் செய்து டிஜிபி உத்தரவு! DIG Suspend | Prisoner Case | Vellore
கூடுதல் எஸ்பி, ஜெயிலரையும் சஸ்பெண்ட் செய்து டிஜிபி உத்தரவு! DIG Suspend | Prisoner Case | Vellore
வேலூர் மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவரை, சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி வீட்டு வேலைக்கு பயன்படுத்தியாக புகார் எழுந்தது. சம்பவம் குறித்து கைதியின் தாயார் புகார் அளித்தார். அதில் தமது மகனை போலீசார் கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டு வேலையின் போது பணம், பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டியதாகவும் கூறி இருந்தார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
அக் 23, 2024