உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருவிழா தடைபட்டால் நடப்பதே வேற: பக்தர்கள் ஆவேசம் | Dindigul | Boothamarathupatti

திருவிழா தடைபட்டால் நடப்பதே வேற: பக்தர்கள் ஆவேசம் | Dindigul | Boothamarathupatti

திண்டுக்கல், பள்ளப்பட்டி அருகே பூதமரத்துப்பட்டியில் காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இங்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருமணம் நாடகம் கோயில் முன்பாக அமைந்துள்ள சிங்கார கலையரங்கில் நடக்கும். ஆனால் திமுக கிளைச் செயலாளர் குணசேகரன், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருவிழாவை தடுக்கின்றனர் என ஊர்மக்கள் குற்றம் சாட்டினர். நாடகம் மேடை அமைக்கும் இடத்தை திமுக பிரமுகர் தங்களது இடம் என கூறி அபகரித்துள்ளார். அது கோயிலுக்கு சொந்தமான இடம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு திண்டுக்கல் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை