உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை ஸ்டார்ட்அப் விழா: முதலீட்டாளர்களை அசத்திய கண்டுபிடிப்புகள் | GlobalStartupSummit

கோவை ஸ்டார்ட்அப் விழா: முதலீட்டாளர்களை அசத்திய கண்டுபிடிப்புகள் | GlobalStartupSummit

கோவை, கொடிசியா வளாகத்தில், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு சார்பில், உலக புத்தொழில் மாநாடு 2025 நடத்தப்பட்டது. 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. தொழில்முனைவோர் விளக்கிய ஐடியாவின் அடிப்படையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 130 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு உறுதி செய்யப்பட்டது. இது, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என நம்புவதாக, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு நிர்வாகிகள் தெரிவித்தனர். பங்கேற்பாளர்கள், தொழில்முனைவோர், கல்லுாரி மாணவர்கள் என இரு நாட்களில், 71,206 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டின் போது தொழில்முனைவோர் கட்சிபடுத்தி இருந்த கண்டுபிடிப்புகள் முதலீட்டாளர்களை ஈர்த்தது.

அக் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !