/ தினமலர் டிவி
/ பொது
/ 'அடி கருப்பி... என் கருப்பி...' சோகத்தில் ஆழ்ந்த மக்கள் | Dog | Karuppi Dead Tutucorin
'அடி கருப்பி... என் கருப்பி...' சோகத்தில் ஆழ்ந்த மக்கள் | Dog | Karuppi Dead Tutucorin
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்ட கருப்பி என்ற சிப்பிப்பாறை இன பெண் நாய் விபத்தில் இறந்தது. தூத்துக்குடி, புளியங்குளத்தை சேர்ந்த விஜயமுத்து தான், கருப்பியை வளர்த்து வந்தார். அவரும் அந்த படத்தில் நடித்துள்ளார். தீபாவளி தினத்தன்று பட்டாசு சத்தத்திற்கு பயந்து, ரோட்டில் கருப்பி அங்கும் இங்கும் ஓடியது. அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் சிக்கி இறந்தது. அதன் உரிமையாளர் விஜயமுத்து, கருப்பிக்கு இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் தமது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்தி இருப்பார்
நவ 01, 2024