உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெருக்கடியில் சிக்கிய பேரன்; சிவாஜியின் வீடு பறிபோகுமா?

நெருக்கடியில் சிக்கிய பேரன்; சிவாஜியின் வீடு பறிபோகுமா?

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த். ராம்குமார் கணேஷின் மகன். துஷ்யந்தும் அவரது மனைவி அபிராமியும், ஈசன் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் சார்பில், விஷ்ணு விஷால் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதற்காக தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடன் வாங்கப்பட்டது. ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பி கொடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால்,ஈசன் நிறுவனம் கடனை திருப்பி தராததால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் தீர்வு காண, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். வட்டியுடன் கூடிய கடன் தொகை 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்தை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்துக்கு ஒப்படைக்கும்படி கடந்தாண்டு மே மாதம் உத்தரவிடப்பட்டது. திரைப்படத்தை விற்று வரும் பணத்தில் கடன் தொகையை ஈடுசெய்யவும், எஞ்சிய தொகையை ஈசன் நிறுவனத்துக்கு வழங்கவும் கூறப்பட்டு இருந்தது.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !