ஒரு முதல்வர் எப்படி இந்த மாதிரி கேள்வி கேட்கிறார் cm m.k.stalin | Gyanesh Kumar
ஒரு முதல்வர் எப்படி இந்த மாதிரி கேள்வி கேட்கிறார் vote theft vote chori rahul cm m.k.stalin 7 questions ECI chief election commissioner Gyanesh Kumar வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கும் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை நடத்தி, சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் கமிஷன் நீக்கியது. இதை ஓட்டு திருட்டு என கூறி, ராகுல், தேஜஸ்வி யாதவ் தேர்தல் ஆணையத்தையும் பாஜவையும் விமர்சித்து வரும் நிலையில், குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நிராகரித்துள்ளார். பீகாரில் வெளிப்படையான முறையில்தான் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்துள்ளது. எல்லா கட்சியும் எங்களுக்கு சமம்தான்; ஒரு கட்சியை உயர்த்தி மறுகட்சியை தாழ்த்தும் எண்ணம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை; பீகாரின் 7 கோடி வாக்காளர்கள் தேர்தல் கமிஷன் பக்கம் நிற்கும்போது அதன் நம்பகத்தன்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது என தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறினார்.