/ தினமலர் டிவி
/ பொது
/ எட்டி உதைத்த யானை எஸ்டேட் அதிகாரி மரணம் | Elephant attack | nilgiris | Dinamalar
எட்டி உதைத்த யானை எஸ்டேட் அதிகாரி மரணம் | Elephant attack | nilgiris | Dinamalar
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி, குயிண்ட் பகுதியில் காட்டு யானைகள் உணவு தேடி சாலையை கடப்பது வழக்கம். குயிண்ட் பகுதி வழியாக இன்று காலை ஸ்கூட்டரில் இருவர் வேலைக்கு சென்றனர். அப்போது, சாலையை கடந்த ஒரு காட்டு யானை, ஸ்கூட்டரை எட்டி உதைத்து விட்டு சென்றது. இதில் ஸ்கூட்டரில் இருந்து சம்சுதீன் 38, செல்லதுரை ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இருவரையும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், சம்சுதீன் இறந்தார்.
செப் 09, 2025