/ தினமலர் டிவி
/ பொது
/ பட்டாசுகள் உரசல்: ஆந்திராவில் விபரீதம் Eluru | Andra | Crackers burst | One dead | 4 injured |
பட்டாசுகள் உரசல்: ஆந்திராவில் விபரீதம் Eluru | Andra | Crackers burst | One dead | 4 injured |
ஆந்திர மாநிலம், ஏலூரு நகரத்தை சேர்ந்தவர் சுதாகர். தீபாவளியை கொண்டாட நிறைய பட்டாசுகள் வாங்கினார். அதை ஒரு பையில் வைத்து மூட்டை போல டூ-வீலர் முன்புறத்தில் வைத்துப் பயணம் செய்தார். கங்கனம்மா கோயில் அருகே சென்றபோது பட்டாசுகள் உரசி பெரும் சத்தத்துடன் வெடித்தது. சுதாகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பட்டாசுகள் வெடித்துச்சிதறியதில் சாலை ஓரம் நின்றிருந்த 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
அக் 31, 2024