நாடு முழுதும் நடக்கும் போர்க்கால ஒத்திகை | Emergency mock drills | MHA orders | Nation wide mock dr
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்து மூலம் இந்தியாவின் பதிலடி தொடங்கி உள்ள நிலையில் பாகிஸ்தான் உடனான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக போர்க்கால ஒத்திகை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 2 நாட்களாக போர்க்கால ஒத்திகை நடக்கிறது. எதிரி நாட்டின் தாக்குதல்களில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, ஆயுதக் கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை மறைப்பது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிப்பது பற்றி இந்த ஒத்திகையில் செய்து காட்டப்படுகிறது. மாவட்ட அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு வார்டன்கள், தன்னார்வலர்கள், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். நேரு யுவகேந்திரா அமைப்புகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.