உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் ; பழனிசாமி கண்டனம் | EPS | AIADMK | Chain Snatching

ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் ; பழனிசாமி கண்டனம் | EPS | AIADMK | Chain Snatching

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் அறிக்கை; விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை தாண்டி, இப்போது பெண் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது. நேற்று ஒரே நாளில் தாம்பரத்தில், சென்னை கமிஷனர் ஆபிசில் பணிபுரியும் பெண் எஸ்ஐ உள்ளிட்ட 8 பேர் நகைப் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு பெண் எஸ்ஐ, 2 மளிகை கடை மற்றும் ஓட்டலில் இருந்த பெண்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், பைக்கில் சென்றவர் என அனைவரும் நகைகளை பறிகொடுத்திருப்பது இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை