தாறுமாறாக காரை ஓட்டிய LIC ஏஜென்டால் பரபரப்பு | Erode LIC agent drunk
ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்தவர் சேதுராமன் வயது 40. எல்ஐசி முகவர். ஈரோடு சூரம்பட்டிக்கு சொந்த வேலையாக நேற்று மாலை வந்தார். சிவகிரிக்கு இரவில் காரில் புறப்பட்டார். இரவு 10.30 மணிக்கு கொல்லம்பாளையம் பகுதியில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்றார். டு வீலரில் வந்தவர்கள் அலறினர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காரை மடக்கி பிடித்து தாக்க முயன்றனர்.
நவ 20, 2024