/ தினமலர் டிவி
/ பொது
/ ஆதரவாளர்கள் திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பு | Ex Minister Vijayabaskar Arrested | Land laundering case
ஆதரவாளர்கள் திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பு | Ex Minister Vijayabaskar Arrested | Land laundering case
100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 5 வாரங்களாக தலைமறைவாக இருந்தார். அவரை கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து சிபிசிஐடி போலீசார் நேற்று காலை கைது செய்தனர். அங்கிருந்து கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 9 மணி நேர விசாரணைக்கு பிறகு மருத்துவ பரிசோதனைக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஜூலை 17, 2024