உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட குடும்பம் | fake currency recovered in Tirupati Andhra

கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட குடும்பம் | fake currency recovered in Tirupati Andhra

திருப்பதியில் தில்லாலங்கடி வேலை கணவன், மனைவி, மகள் சிக்கினர் ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் ரமேஷ். மனைவி சந்தியா, மகள் ஈஷாவுடன் செர்லோபள்ளி பகுதியில் வசித்து வந்தார். ரமேஷும் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த முனிகிருஷ்ணா ராவும் சேர்ந்து ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டனர். முனிகிருஷ்ணாவும் ரமேஷ் வீட்டிலேயே தங்கியிருந்தார். ஷேர் மார்க்கெட் முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிப்பது எப்படி என ரமேஷ், ராவ் யோசித்தனர். கள்ள நோட்டு அச்சடித்து சின்னச்சின்ன கடைகளில் மாற்ற திட்டமிட்டனர்.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ