பஹல்காமில் பரூக் அப்துல்லா ஆவேசம் Farooq Abdullah Pahalgam terror attack
0341 பஹல்காம் வந்த டூரிஸ்ட்கள் உலகுக்கு சொன்ன மெசேஜ் சூப்பர் பவர் ஆக காஷ்மீர் மாறும் டிஸ்க்: பஹல்காமில் டூரிஸ்ட்களுடன் உரையாடிய பரூக் அப்துல்லா ஆவேசம் Farooq Abdullah Pahalgam terror attack former cm jammu kashmir பஹல்காமில் ஏப்ரல் 22ம்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அந்நேரம் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் மொத்த பேரும் அவரவர் ஊர்களுக்கு அவசர அவசரமாக புறப்பட்டனர். தாக்குதல் நடந்து 10 நாட்களாகி விட்ட நிலையில், பஹல்காமில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. மிகக்குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை பஹல்காமில் காண முடிகிறது. இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, பஹல்காமுக்கு சென்றார். சுற்றுலா பயணிகளை சுட்ட பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்க முயன்று, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு இரையான குதிரை சவாரி வீரன் சையத் ஆதில் ஹுசைன் ஷா Syed Adil Hussain Shah வீட்டுக்கு பரூக் அப்துல்லா சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.