கொங்கு மண்டலத்திலும் கனமழை கொட்டப்போகுது fengal cyclone| tn Rain| chennai rain
பெஞ்சல் புயல் இன்று இரவுக்குள், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுதவிர 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 8 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடந்தாலும், நாளையும் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தரப்பட்டுள்ளது. விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையில் மிக கனமழைக்கும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். சென்னை உட்பட 14 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 2ம் தேதி கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். 7 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 3ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோட்டில் கனமழை பெய்யும். 4,5 தேதிகளில் மழை குறையும். அந்த இரு தினங்களில் தமிழகம் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.