மதுரை லேடீஸ் ஹாஸ்டல் முன் சோக காட்சி | Fire Accident | Madurai Fire
எல்லாமே போச்சு.. கருகி கிடக்கும் சர்டிபிகேட் கலங்கி நிற்கும் பெண்கள்! மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் பழைய பிரிட்ஜ் வெடித்து தீ பற்றியது. இன்று அதிகாலை 4.30க்கு நடந்த இந்த சம்பவத்தால் பலர் ஹாஸ்டல் உள்ளே சிக்கி கொண்டனர். தீயில் சிக்கி பள்ளி ஆசிரியர்கள் பரிமளம் மற்றும் சரண்யா ஆகிய இருவர் இறந்தனர். 3 பெண்கள் தீக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். பலரது அசல் ஆவணங்கள், உடமைகள் கருகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் விபத்தில் தப்பிய பெண்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உரிய அனுமதி பெறாமல் ஹாஸ்டல் நடத்தி வந்த இன்பா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
செப் 12, 2024