உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காரைக்கால் மீனவர்கள் கைது: மத்திய அரசு மீட்டுவரணும் | Karaikal | Fisherman | Dinamalar

காரைக்கால் மீனவர்கள் கைது: மத்திய அரசு மீட்டுவரணும் | Karaikal | Fisherman | Dinamalar

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 17 பேர் கடந்த 7ம் தேதி மீன் பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் விசைபடகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், 17 மீனவர்களை கைது செய்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். படகை பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்களையும், படகையும் மீட்டு கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் காரைக்கால் மீனவர் வலியுறுத்தினர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் காரைக்கால் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி