தரமற்ற உணவு விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை உத்தரவு! Hotel Foods | Food Safety Officer | Tamil
நடுத்தர மற்றும் பெரிய ஹோட்டல்களில், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் பெற்றவர்களை பணி அமர்த்துவது கட்டாயம் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டு உள்ளது. உணவு முறை மாற்றத்தால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வயிற்று புண் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஹோட்டல்களில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்வதே பிரதான காரணமாகும். குறிப்பாக, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது; காலாவதியான பொருட்களை பயன்படுத்துதல்; ரசாயனம் கலந்த உணவு உள்ளிட்ட காரணங்களால், ஹோட்டல் உணவுகள் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. எனவே ஹோட்டல்களில் தரமான உணவு விற்பனையை உறுதி செய்யும் வகையில், 52,520 வணிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவர், ஹோட்டல்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: