போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு: அதிபர் டிரம்ப் வருத்தம் former brazilian president sentenc
தேர்தலில் முறைகேடு நடந்ததுதான் தமது தோல்விக்கு காரணம் குற்றம்சாட்டிய போல்சனாரோ, மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற ஜனநாயகத்திற்கு எதிராக சதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆட்சியை கவிழ்க்க சதி செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த அவர் அர்ஜென்டினாவுக்கு தப்பியோ முயன்றார். அவர் மீதான இந்த வழக்கை விசாரித்த பிரேசிலின் சுப்ரீம் கோர்ட், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தல், வன்முறை தூண்டுதல், தேர்தலை ரத்து செய்ய முயன்றது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளில் போல்சனாரோவை குற்றவாளி என அறிவித்தது. 5 நீதிபதிகளில் 4 பேர் முன்னாள் அதிபரை குற்றவாளி என்பதை உறுதி செய்தனர். அவருக்கு 27 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.