/ தினமலர் டிவி
/ பொது
/ யானைக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் பக்தர்கள் | Gandhi Mathi | Nellaiyappar Temple Elephant
யானைக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் பக்தர்கள் | Gandhi Mathi | Nellaiyappar Temple Elephant
நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி திடீர் மரணம் எதனால்? திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் 1985ல் நன்கொடையாக வழங்கப்பட்ட காந்திமதி என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வந்தது. கோயில் விழாக்களில் உற்சவர்களுக்கு முன்னாள் காந்திமதி பீடு நடைபோட்டுச் செல்லும். 56 வயதான காந்திமதிக்கு வயது முதிர்வு காரணங்களால் மூட்டு வலி உள்பட பல்வேறு உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் இருந்தன. 5 ஆண்டுகளாக காந்திமதி யானைக்கு மூட்டு வலிக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 1 மாதமாக யானைக்கு வலி அதிகமானது. நின்றபடியே யானை தூங்க ஆரம்பித்தது. நேற்று அதிகாலை படுத்து தூங்கிய நிலையில், அதன் பிறகு அதனால் எழுந்து நிற்க முடியவில்லை.
ஜன 12, 2025