புனே தகடுசேட் கணபதி கோயிலில் பிரம்மாண்ட கணபதி வழிபாடு! Pune Ganapati Chaturthi | Dagduseth Halwai
ஒரே நேரத்தில் 42000 பெண்கள் விநாயகருக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு! இந்தியா முழுதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 7ம் தேதி துவங்கியது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்களுக்கு பண்டிகை கொண்டாட்டம் களைகட்டும் முக்கிய கோயில்களிலும் பக்தர்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம் அந்த வகையில், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தகடுசேட் கணபதி கோயிலில் வளாகத்தில் 42,000 பெண்கள் ஒரே நேரத்தில் விநாயகர் வழிபாடு நடத்தினர் அனைவரும் வரியாக அமர்ந்து பஜனைப் பாடல்களை பாடி விநாயகருக்கு ஆரத்தி காட்டினர். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி ஒரே நேரத்தில் விநாயகர் வழிபாடு நடத்துவர் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகபட்சமாக 42,000 பெண்கள் வழிபட்டனர் இது இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது