இந்த முறை விட்ர கூடாது; வாசன் முயற்சி பலிக்குமா
லோக்சபா தேர்தலின்போதே, அதிமுக, பாஜ, பாமக, தேமுதிக கூட்டணி உருவாக தமாகா தலைவர் ஜிகே வாசன் முயற்சி மேற்கொண்டார். இதற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். அதன் பின், சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் 3 முறை பேச்சு நடத்தினார். பாஜவுடன் கூட்டணியை இபிஎஸ் விரும்பவில்லை. வாசன் ஆலோசனையை பழனிசாமி கேட்காமல் தவிர்த்ததால், அவருக்கு மட்டுமல்ல, உடனிருந்த கூட்டணி கட்சிகளுக்கும் நஷ்டம் என்பதை, அதிமுக தலைவர்களும், பிற கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் தோல்விக்குப் பின் உணர்ந்தனர்.
நவ 13, 2024