உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதையில் HM மட்டை: பெண் கல்வி அதிகாரி அதிர்ச்சி Government school vairavanpatti pudukkottai drunke

போதையில் HM மட்டை: பெண் கல்வி அதிகாரி அதிர்ச்சி Government school vairavanpatti pudukkottai drunke

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வைரவன்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தமே ஏழு மாணவர்கள்தான் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி (55). அவரேதான் ஆசிரியரும் கூட. எல்லா வகுப்புக்கும் எல்லா பாடங்களையும் அவர்தான் எடுக்க வேண்டும் என்ற நிலை. அந்தோணி இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்து 2 மாதம்தான் ஆகிறது. அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் சரிவர பள்ளிக்கு வர மாட்டார். பள்ளிக்கு வரும் நாட்களில் மேஜையில் அமர்ந்து மது அருந்துவார்: போதையில் மட்டையாகி பள்ளியிலேயே படுத்து தூங்கி விடுவார் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறுகின்றனர். சில நேரங்களில் மது குடித்துவிட்டு பள்ளியிலேயே வாந்தி எடுப்பதும் உண்டாம்.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை