உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திண்டுக்கல் அரசு பள்ளியில் பகீர் சம்பவம் | Government School | School Roof

திண்டுக்கல் அரசு பள்ளியில் பகீர் சம்பவம் | Government School | School Roof

திண்டுக்கல் சந்தைப்பேட்டை ரோடு பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 400 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள வகுப்பறை கட்டடங்கள் 2009 திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. வகுப்பறையில் பல இடங்களில் பெயர்ந்து விழுந்தும், சேதமாகியும் உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதிகாரிகள் 3 மாதங்களுக்கு முன் பள்ளியை ஆய்வு செய்தனர். சேதமான சுவர்கள் சீரமைக்கப்பட்டு, பெயின்ட் அடித்து மராமத்து பணிகள் நடந்தது. அதேபோல் 4ம் வகுப்பு கட்டடத்திலும் 1 மாதத்திற்கு முன் மராமத்து பணிகள் நடந்தது. கட்டடம் சீரமைக்கப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இப்போது இடிந்துள்ளது. 4ம் வகுப்பு மாணவர்கள் இருந்த வகுப்பறை கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது 40க்கு மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர்.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ