அரசு பல்கலை துணைவேந்தர்கள் மொத்தமாக ஆப்சென்ட்! | Governor Ravi | Vice Chancellor Confrence
தமிழகத்தில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பின், அரசு மற்றும் தனியார் பல்கலை துணை வேந்தர்களின் மாநாட்டை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடத்தி வருகிறார். நான்காவது ஆண்டாக இன்று ஊட்டி ராஜ்பவனில் பல்கலை துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். முன்னதாக மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அரசு, தனியார், மத்திய பல்கலை துணைவேந்தர் மூவர் என 49 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அண்ணா, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன் என தமிழக அரசு பல்கலைகளின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. மொத்தமாக ஆப்சென்ட் ஆகி இருந்தனர். மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது; கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. துணைவேந்தர்களின் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டி கூட்டத்தில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர்.