விழுப்புரம் போக்குவரத்து பணிமனையில் பரபரப்பு | Govt bus driver - Conductor protest | Tea issue
விழுப்புரத்தில் இருந்து பம்மாதிரிபேட்டை வரை செல்லும் அரசு பஸ்சில், 50 வயது குபேர் டிரைவராகவும், 48 வயது பாலசுந்தரம் கண்டக்டராகவும் இருக்கின்றனர். விழுப்புரம் நோக்கி பஸ் வந்தபோது டிரைவர் குபேருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அசோகபுரி பகுதியில் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவரும், கண்டக்டரும் டீ குடித்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற மேலாண் இயக்குனர் துரைக்கண்ணு இதை பார்த்துவிட்டு இருவரும் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளார். அதன்படி பொதுமேலாளர் ஜெய்சங்கர், பணியின்போது டீ குடித்த டிரைவர், கண்டக்டர் இருவரையும் டிரான்ஸ்பர் செய்து, சஸ்பெண்ட் செய்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் விழுப்புரம் 2வது போக்குவரத்து பணிமனையில் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றனர்.