/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவர்கள் சாப்பிட்ட சத்துணவில் என்ன பிரச்னை? | Govt school mid-day meal|Students faint| Ariyalur
மாணவர்கள் சாப்பிட்ட சத்துணவில் என்ன பிரச்னை? | Govt school mid-day meal|Students faint| Ariyalur
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சோழன் குறிச்சி கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 22 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் நேற்று மதியம் பள்ளியில் சத்துணவாக வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக மயக்கம் அடைந்தனர். அடுத்தடுத்து 18 பேர் மயக்கம் அடைந்த நிலையில் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஜன 30, 2024