/ தினமலர் டிவி
/ பொது
/ கைதான பயங்கரவாதிகளின் திட்டம் என்ன? டில்லியில் பரபரப்பு Gujarat ATS arrested 4 al-Qaida terrorists
கைதான பயங்கரவாதிகளின் திட்டம் என்ன? டில்லியில் பரபரப்பு Gujarat ATS arrested 4 al-Qaida terrorists
இந்தியாவிலும் அல்குவைதா அமைப்பு செயல்பட்டு வருகிறது. குஜராத், டில்லி, உத்தரப்பிரதேசத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் சேர்ந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக, குஜராத் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சந்தேகத்துக்குரிய சில இளைஞர்களை குஜராத் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்கள் சதித் திட்டம் தீட்டிவருவது உறுதியானதை தொடர்ந்து, குஜராத், டில்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே நேரத்தில் அதிரடி ஆக் ஷனில் குஜராத் போலீசார் இறங்கினர்.
ஜூலை 23, 2025