உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உபியில் 100+ மரணங்கள் நடந்தது இப்படி தான்-பகீர் தகவல் | hathras incident | Stampede at satsang in UP

உபியில் 100+ மரணங்கள் நடந்தது இப்படி தான்-பகீர் தகவல் | hathras incident | Stampede at satsang in UP

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக பக்தர்கள் மரணம் அடைந்தனர். பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி விட்டது. இன்னும் 100க்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் உள்ளது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மட்டும் இன்றி மொத்த இந்தியாவையும் உலுக்கி இருக்கிறது. இதை நேரில் பார்த்தவர்கள் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். சொற்பொழிவு முடிந்ததும் எல்லோரும் வீடுகளுக்கு புறப்பட்டனர். ரோடு பகுதி உயரமாக இருந்தது. அதையொட்டி தாழ்வான சாக்கடை கால்வாய் ஓடியது.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை