உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரியலூர் ரயில்வே ஸ்டேஷனில் 77 லட்சம் பறிமுதல் | Hawala money | Ariyalur railway station | railway

அரியலூர் ரயில்வே ஸ்டேஷனில் 77 லட்சம் பறிமுதல் | Hawala money | Ariyalur railway station | railway

கட்டுக்கட்டாய் 500 நோட்டுகள் பயணியிடம் சிக்கிய ஹவாலா பணம் அரியலூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று இரவு ரயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பயணியின் நடத்தையில் சந்தேகம் வந்தது. அவரது உடமைகளை சோதனை செய்த போது கட்டு கட்டாக பணம் சிக்கியது. அவரிடம் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. எண்ணிக்கை முடிவில் மொத்தம் 75 லட்சம் இருந்தது. திருச்சி வருமான வரி அதிகாரிகளிடம் ரயில்வே போலீசார் தகவல் கொடுத்தனர். முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட பயணி பெரம்பலூர், மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் என்பது தெரிந்தது. திருச்சி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து வினோத்குமார் அரியலூரில் இறங்கி உள்ளார். தான் சோள வியாபாரம் செய்து வருவதாகவும், சோளம் விற்ற பணம் தான் இவை என முதலில் வினோத்குமார் கூறி உள்ளார். ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில் ஹவாலா பணப்பரிமாற்றத்திற்கு இந்த பணம் கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 77 லட்சத்து 11 ஆயிரத்து 640 ரூபாயை வருமான வரி அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். வினோத்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை