அப்பாவின் கோபத்தால் சோகத்துடன் பிரிந்த மணமக்கள்
டில்லியில் ஒரு திருமணத்துக்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பேண்டு வாத்தியங்கள் முழங்க மணமகனும் அவர் வீட்டாரும் ஊர்வலமாக சென்றனர். மணப்பெண் வீட்டை அடைந்தபோது, தடபுடலாக வரவேற்றனர். அப்போது, சோலி கீ பீச்சே க்யா ஹை... என்ற பிரபலமான இந்தி பாடல் ஒலிபரப்பப்பட்டது. மணமகனின் நண்பர்கள் உற்சாகமாக ஆடினர். மணமகனையும் உசுப்பி விட்டதில், அவரும் மகிழ்ச்சி பொங்க டான்ஸ் போட்டார். அதை பார்த்த பெண்ணின் தந்தை ஷாக் ஆகி கோபப்பட்டார். பாரம்பரியம் மிகுந்த தங்கள் குடும்ப பெரியவர்கள் முன்பு மணமகன் டான்ஸ் ஆடியது அநாகரிகம் என்று சொல்லி, திருமணத்தை நிறுத்த உத்தரவிட்டார். அனைவரையும் வெளியே போக சொன்னார்.
பிப் 03, 2025