/ தினமலர் டிவி
/ பொது
/ அறுந்து விழுந்த மின் கம்பியால் மழைநீரில் பாய்ந்த மின்சாரம் | Heavy rain | EB wire broken | Dogs affe
அறுந்து விழுந்த மின் கம்பியால் மழைநீரில் பாய்ந்த மின்சாரம் | Heavy rain | EB wire broken | Dogs affe
இன்று காலை கடலூர் அருகே உள்ள கோண்டூர் பகுதிக்குட்பட்ட பாப்பம்மாள் நகரில் மின் கம்பி ஒன்று சாலையில் அறுந்து விழுந்தது. மழைநீரில் விழுந்த மின்கம்பியால் அப்பகுதி சாலை முழுதும் மின்சாரம் பாய்ந்திருந்து. அப்போது அந்த வழியாக சென்ற நாய் ஒன்று மின்சாரம் தாக்கி அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள், மின்சாரம் தாக்கி நாய் இறந்ததை பார்த்து பதறினர். அதே நேரம் மேலும் 2 நாய்கள் அதே வழியில் ஓடியதை பார்த்து விரட்டினர். ஆனால் அதற்குள் 2 நாய்களும் மின்சாரம் தாக்கி அவர்கள் கண் முன்னே துடிதுடித்து இறந்தன.
அக் 14, 2024