8 மாவட்டத்துக்கு பண்டிகை நாளில் கனமழை எச்சரிக்கை | heavy rain alert | TN weather today | IMD chennai
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிழக்கு இலங்கை கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 18ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். குறிப்பாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போல் 15ம் தேதி அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்.