உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 ஆயிரம் வீடுகள் சேதம்; கொத்து கொத்தாக மடிந்த பிராணிகள் Himachal Landslide|Flood|Himachal Disaster

3 ஆயிரம் வீடுகள் சேதம்; கொத்து கொத்தாக மடிந்த பிராணிகள் Himachal Landslide|Flood|Himachal Disaster

ஹிமாச்சல பிரதேசத்தில் ஜூனில் பருவமழை தொடங்கியதில் இருந்தே, பல முறை மேகவெடிப்பு நிகழ்ந்தது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால், 257ல் பேர் பலியாகியுள்ளனர். இயற்கை சீற்றத்தில் சிக்கி, இதுவரை 331 பேர் காயம் அடைந்துள்ளனர். 37 பேர் காணாமல் போயுள்ளனர். 1028 வீடுகள் முற்றிலும் உருக்குலைந்தன. 2,157 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளன. 285 மாட்டுக் கொட்டகைகள், 699 கடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 1,625 வளர்ப்பு பிராணிகள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவையினங்கள் பலியாகியுள்ளன. மாநிலம் முழுதும் பல தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் கடும் சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, கங்கரா, மண்டியில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழையால், மாநிலம் முழுதும் 2.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்டை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆக 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ