2023ல் தொடங்கி இதுவரை நடந்த தாக்குதல் லிஸ்ட் | Hospital | Tamilnadu Hospital Safety
சென்னை கிண்டி அரசு ஆஸ்பிடலில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்தினார். கேன்சரால் பாதிக்கப்பட்ட தனது அம்மாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி அவரது மகன் விக்னேஷ் டாக்டரை தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் கூறினார். டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கிண்டி அரசு ஆஸ்பிடல் வளாகத்தில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.