/ தினமலர் டிவி
/ பொது
/ ஏடிஎம் உள்ளே வைத்து இருவருக்கு பூட்டு: ஓசூரை பரபரப்பாக்கிய சம்பவம்| Hosur ATM robbery | Haryana lorr
ஏடிஎம் உள்ளே வைத்து இருவருக்கு பூட்டு: ஓசூரை பரபரப்பாக்கிய சம்பவம்| Hosur ATM robbery | Haryana lorr
ஓசூரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மெஷின் சமீபத்தில் ரிப்பேர் ஆனது. ஏடிஎம் பராமரிப்பு செய்பவர்கள் அதனை பழுது பார்த்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் ஏடிஎம் உள்ளே சில கோளாறுகள் இருந்துள்ளது. அது தானாக ரிப்பேர் ஆகவில்லை. யாரோ செய்த கோளாறு என தெரியவந்தது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வடமாநிலத்தை சேர்ந்த இருவர் ஏடிஎம் மிஷின் அருகே நீண்ட நேரம் நின்றது பதிவாகி இருந்தது. அதில் இருந்து நூதன முறையில் பணம் கொள்ளையடிப்பது தெரியவந்தது.
செப் 16, 2025