கோயிலை இணைக்க கூடவா லஞ்சம்? அறநிலை அதிகாரிக்கு காப்பு | HRCE | Coimbatore
சூலூர் பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் வசிக்கும் பகுதியில் தனியாரால் நிர்வகிக்கப்படும் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வருமானம் அதிகம் வந்த போதிலும் முறையான நிர்வாகம் இல்லை என சுரேஷ் குற்றம் சாட்டினார். இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கோவை இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவிடம் மனு கொடுத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், கோயிலை அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும் நடைமுறையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என ஜூன் 16ம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், சுரேஷ் குமார், அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை சந்தித்தார். அப்போது கோயிலை அறநிலையத்துறை எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்ய வேண்டும் என்றால், தனக்கு 3 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என இந்திரா கேட்டுள்ளார். அவ்வளவு பணம் தர முடியாது என சுரேஷ் கூறிய நிலையில், இரண்டு லட்சம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார் இந்திரா. பல முறை பேரம் பேசி, கடைசியில் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் பரிந்துரை செய்வதாக ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுரேஷ்குமார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு, புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய 1.5 லட்சம் பணத்தை இந்திராவிடம் சுரேஷ் வழங்கினார்.