/ தினமலர் டிவி
/ பொது
/ பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம் | Road accidents 5 dies Tiruvallur
பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம் | Road accidents 5 dies Tiruvallur
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். (65). ஓய்வு பெற்ற அதிகாரி. இவரது மனைவி கீதா (56). இவர்கள் தங்களது மகன் வயிற்று பேத்திகளுடன் திருவள்ளூரில் உள்ள கோயிலுக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். செவ்வாய்ப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மீது கார் மோதியது. இதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த அவரது மனைவி கீதா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மார் 28, 2026