உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐதராபாத்தில் இருந்து தமிழகம் திரும்பிய இளைஞருக்கு சோகம் | Covid 19 | Young man died | Villupuram |

ஐதராபாத்தில் இருந்து தமிழகம் திரும்பிய இளைஞருக்கு சோகம் | Covid 19 | Young man died | Villupuram |

நாடு முழுதும் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. கேரளா, மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி உட்பட ஏராளமான மாநிலங்களில் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 498 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு 5,364ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 4 பேர் இறந்தனர். பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணியலாம் எனவும், கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஜூன் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி