உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுபான பாட்டில்களை சாலையில் வீசி உடைத்ததால் பரபரப்பு | Illegal liquor sale | Women protest

மதுபான பாட்டில்களை சாலையில் வீசி உடைத்ததால் பரபரப்பு | Illegal liquor sale | Women protest

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை அருகே பழனி பிரதான மலை சாலையில், கடந்த சில நாட்களாக கள்ள சந்தையில் மது விற்பனை நடந்து வந்தது. அங்கு தகர கொட்டகை அமைத்து மதுபான பாரும் செயல்பட்டது. வீட்டுக்கு அருகிலேயே மதுபானம் கிடைப்பதால் மாணவர்கள், இளைஞர்கள், வீட்டு ஆண்கள் மதுவுக்கு அடிமையாவதாகவும், விபத்து நடப்பதாகவும் அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் தொடர்ந்து மது விற்பனை நடந்ததால் ஆத்திரமடைந்த பெண்கள் மதுபான பார் முன் திரண்டு விற்பனையாளர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை