23 வரை மழை தொடர வாய்ப்பு! | IMD | Rain | Heavy Rain
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2வது வாரத்தில் துவங்கும் வடகிழக்கு பருவமழை, ஜனவரி முதல் அல்லது 2வது வாரத்தில் விலகுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மழை தொடர்கிறது. நேற்று 4 மாவட்டத்துக்கு கனமழை நெல்லைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளதாவது; வழக்கமாக நவம்பர், டிசம்பரில் பெய்யும் அளவுக்கு ஜனவரியில் கனமழை பெய்யாது. இந்த ஆண்டு அக்டோபர் 15ல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. டிசம்பர் வரை இயல்பை விட, அதிக மழை பெய்தது. வழக்கத்துக்கு மாறாக, ஜனவரியிலும் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது
ஜன 20, 2025