தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருளாதாரம் உயரும் INDIA - UK FTA | Global Trade Triumph |Historica
அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 2022 ஜனவரி முதல் இந்த ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் பேச்சு நடத்தி வந்தன. இறுதியில் கடந்த மே 6ம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கையெழுத்தாகி இருக்கிறது. மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டன் அமைச்சர் ஜொனாத்தன் ரொனால்ட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கோப்புகளை பரிமாறிக்கொண்டனர். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் உலகளாவிய வர்த்தகத்தில் வரலாற்று சிறப்புமிக்க மைல் கல்லாக அமையும். அதுமட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரமும் உயர்வடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.