நாடு முழுதும் ஒரே நேரத்தில் விடுக்கப்பட்ட செல் ப்ராட்காஸ்ட் அபாய எச்சரிக்கை
நாடு முழுதும் இன்று பகல் 11.40க்கு பொதுமக்களின் மொபைல் போன்களில் அபாய எச்சரிக்கை சத்தம் ஒலித்தது. போனை வைப்ரேஷன் மோடில் போட்டது போல், அனைவரது மொபைல் போன்களும் அதிர்ந்தன. ஏதோ ஒரு எச்சரிக்கை செய்தி டிஸ்பிளேவில் தெரிந்ததால், மக்கள் பதற்றம் அடைந்தனர். வீடுகள், அலுவகங்கள், தொழில் நிறுவனங்கள், பயணத்தில் இருந்தோர் என அனைவரின் மொபைல் போன்களும் ஒரே நேரத்தில் இந்த தகவலை ரிசீவ் செய்தன.
மே 02, 2026