அமெரிக்கா-பாக் பஞ்சாயத்தின் பகீர் பின்னணி India vs Pakistan | PAK vs US issue | Pak missile program
இந்தியாவிடம் வம்பு இழுப்பதை வாடிக்கையாக வைத்திருந்த பாகிஸ்தான், இப்போது அமெரிக்காவுக்கே ஸ்கெட்ச் போட்டு அடி வாங்கி இருக்கும் விவகாரம் உலக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தியாவை தாக்க ஏவுகணை தயாரித்து வந்த பாகிஸ்தான், திடீரென அமெரிக்காவையே குறி வைக்கும் ஏவுகணை தயாரிக்கும் வேலையில் இறங்கியது. இதை மோப்பம் பிடித்த அமெரிக்கா, பாகிஸ்தானின் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தை தவிடுபொடியாக்கி பாகிஸ்தானை கதற விட்டுள்ளது. அமெரிக்காவையே குறி வைக்கும் முடிவை பாகிஸ்தான் எடுத்ததற்கு பின்னணியில் இந்தியா மீதுள்ள தீரா பகையும் முக்கிய காரணம் என்கின்றனர். உண்மையில் பாகிஸ்தான் என்ன செய்தது? அமெரிக்கா ஏன் பொருளாதார தடை விதித்தது? அமெரிக்கா-பாகிஸ்தான் பஞ்சாயத்தில் இந்தியாவின் பெயர் அடிபடுவது ஏன் என்பதை பார்க்கலாம். பொதுவாக ராணுவ பலத்தில் பாகிஸ்தானை விட பல மடங்கு முன்னேறிய நிலையில் இந்தியா இருக்கிறது.